Wednesday 16 March 2016

சக்திவாய்ந்த பிரார்த்தனை(Powerful Prayer)


உங்கள் ஒவ்வொருடைய வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்துகின்ற சக்திவாய்ந்த பிரார்த்தனை கீழே சொல்லப்பட்டுள்ளது. அது உங்களை உயர்ந்த ஆன்ம வளர்ச்சி பெற்ற மனிதர்களாக மாற்றக்கூடியது. இந்த பிரார்த்தனையை செய்யும் காலமெல்லாம்  உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், அன்பையும், மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் தொடர்ந்து வழங்கக்கூடியது. 

பிராத்தனை செய்யும் முறை

இந்த பிரார்த்தனையை இரவில் தூங்குவதற்கு சற்று முன்பு செய்ய வேண்டும். தூங்குவதற்காக படுத்துக்கொண்டு, தூக்கம் சொக்கும் அரைமயக்க நிலையில் உடலை தளர்வாக வைத்துக்கொள்ளுங்கள். பிறகு பிரார்த்தனையின் ஒவ்வொரு வாக்கியத்தையும் உணர்ச்சிபூர்வமாக உங்களின் உடலில் உணர்ந்து நிதானமாக கூறுங்கள். பிரார்த்தனை முடிந்தவுடன் அப்படியே தூங்கிவிடுங்கள்.

பிரார்த்தனை

நான் எதற்கும் பயம் கொள்வதில்லை.
நான் எதற்கும் கோபம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் கவலைப்படுவதில்லை.
நான் எதற்காகவும் வெட்கம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் அவமானம் அடைவதில்லை.
நான் எதற்காகவும் குற்ற உணர்வு அடைவதில்லை.
நான் யார் மீதும் எதற்காகவும் வெறுப்பு கொள்வதில்லை.
நான் யார் மீதும் எதற்காகவும் பொறாமை கொள்வதில்லை.
நான் மற்ற எவரிடமும் போட்டி போடுவதில்லை.
நான் எவர் மீதும் விமர்சனம் செய்வதில்லை.

நான் எந்த வகையிலாவது பிறருக்கு துன்பம் விளைவித்திருந்தால் அதற்காக என்னை நான் முழுமையாக மன்னிக்கிறேன். மற்றவர்கள் எந்த வகையிலாவது எனக்கு துன்பம் விளைவித்திருந்தால் அதற்காக அவர்களை நான் முழுமையாக மன்னிக்கிறேன்.

நான் பிறருடைய வளர்ச்சியை, செல்வசெழிப்பை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் மேலும் செழிப்படைய வாழ்த்துகிறேன்.

நான் நிபந்தனையற்ற அன்பாக இருக்கிறேன்; நான் என் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறேன்; நான் அனைவர்மீதும் நிபந்தனையற்ற அன்பு செலுத்துகிறேன். நான் எப்போதும் ஆனந்தமாக இருக்கிறேன்; அமைதியுடன் இருக்கிறேன்; திருப்தியாக இருக்கிறேன்.

என்னுடைய தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றும் மூல ஆதாரமாக கடவுள் இருக்கிறார். என்னுடைய எல்லா தேவைகளும் ஒவ்வொரு கணப்பொழுதிலும்  ஒவ்வொரு இடத்திலும் நிறைவேறுகின்றன.

பணம் நல்லது. நான் பணத்தை மிகவும் நேசிக்கிறேன். என்னுடைய வாழ்க்கையில் என்றும் பணம் தாராளமாகவும், அபரிமிதமாகவும், சந்தோஷமாகவும் நிலையாகவும் புழங்குகிறது. அதை நான் நல்ல முறையில் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துகிறேன். நான் நல்ல செல்வ செழிப்புடன் இருக்கிறேன். நான் தினமும் முன்னேறிக்கொண்டு இருக்கிறேன்; மேலும் செழிப்படைந்துகொண்டு இருக்கிறேன். என்னுடைய ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டன.  அவற்றை நான் மகிழ்ச்சியாக அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன். அதற்காக என் முழு மனதோடு கடவுளுக்கு நான் நன்றி செலுத்திகிறேன். கடவுளுக்கு நன்றி.



--- விவேக்

No comments:

Post a Comment